31/05/2026
சக்கரை உள்ளவர்கள் இரண்டு
வேளை சமைத்த உணவு ஒரு
வேளை சமைக்காத சிகப்பு
அவலில் தேங்காய் துருவல்,
ஒரிரு பேரீச்சம் பழம்
சின்ன வெங்காயம்,
கேரட் துருவல் சேர்த்தும்
பிசைந்து சாப்பிடலாம்.
பேரீச்சம் பழம் இனிப்பு தேங்காய்
இனிப்பு என்று அச்சப்பட வேண்டாம்.
சீனி,நாட்டு வெல்லம்,கருப்பட்டி
போன்ற ஒரு பொருளை இன்னொரு
பொருளாக மாற்றி எடுக்கப்படும்
செயற்கை இனிப்புகளையும்
அப்படிப்பட்ட இனிப்புகளில் செய்த
இனிப்பு பண்டங்களையுமே முழுவதும்
தவிர்க்க வேண்டும்.இயற்கை
இனிப்பான பழங்கள்,காய்களை
சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.
வேண்டுமானால் செயற்கை
இனிப்புகளான சீனி,வெல்லம்,
கருப்பட்டி,தேன் போன்ற எதையும்
சேர்க்காமல்அவற்றில் செய்யப்பட்ட பண்டங்களானபிரட்,பிஸ்கெட்,சாக்லேட்,
பணியாரம்,லட்டு,ஜிலேபி போன்ற
பண்டங்கள் எதையும் சாப்பிடாமல்
சில நாட்கள் இருந்து எதேனும்
இயற்கை இனிப்பான ஒரு
பழத்தை மட்டும் அளவாக
எடுத்துப் பாருங்கள்.
சக்கரை வேகமாக ஏறவே ஏறாது.
கூடவே உடற்பயிற்சி மூச்சிப்பயிற்சி,
யோகாசனம்,தேவையான ஓய்வு,
நல்ல ஆரோக்கிய மனநிலையுடன்
இருப்பது மிக அவசியம்.
எந்த வேளை உணவாக இருந்தாலும்
பசித்த பின் மட்டுமே உண்ண வேண்டும்.
உண்ணும் போது முதலில் காய்கறி
சாலட்,கூட்டு, பொரியல், வேர்க்கடலை போன்றவற்றை ஒரு கிண்ணம் அளவு
சாப்பிட்டு பிறகு உணவு சாப்பிட்டால்
சக்கரை வேகமானஅளவில் ஏறவே ஏறாது.
தொடர்ந்து இந்த உணவுமுறை
வாழ்க்கை முறையை கையாண்டால்
ஆரம்ப நிலை சக்கரை முற்றிலும்
குணமாகும்.முற்றிய நிலையில்
உள்ளவர்கள் மாத்திரை மருந்துகளோடு
இந்த வழிமுறைகளையும் கடைப்பிடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக நிவாரணம்
பெறலாம்.✅
அதெல்லாம் ஒன்றுமில்லை
உணவை மென்று தின்றால்
போதும் தினமும் உடற்பயிற்சி
செய்தால் போதும் மூலிகை
மருந்துகளை மட்டும் எடுத்து
வந்தால் போதும் என்று
இறுமாப்பாய் இருந்து சக்கரை
முற்றி கட்டுப்படுத்த முடியாமல்,
எடை குறைந்து மிக
பலவீனமானவர்கள் பலரை
கண்டுவருகிறேன்.தயவு
செய்து நீங்களும் அப்படி
இருந்து விடாதீர்கள்.🙏🏼
-ஏகப்பிரியன்.
Aum Herbals: 9629131089
Online yoga: 9629131089
#சக்கரை_வியாதி
#இயற்கைஉணவு