Aum herbal

Aum herbal மூலிகை மருந்தே விளங்குது சிறந்தே

06/06/2026
05/06/2026

சாப்பிடும் சாதத்தில் ஒரு
மேசைக்கரண்டி பருப்பு
பொடியைப் போட்டு இரண்டு
மேசைக்கரண்டி பசு நெய் சேர்த்து
பிசைந்து சாப்பிட ஊட்டச்சத்து
குறைபாடு நீங்கும் உடலில்
சதைப் பிடிப்பு ஏற்படும்.

முருங்கைக் கீரையை சமைக்கும்
போது இரண்டு மூன்று மேசைக்கரண்டி
பசு நெய்ச் சேர்த்து சமைத்து தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை மாறும் ஆண்மை விருத்தியாகும்.
கண்பார்வை தெளிவாகும்.

இரவு தூங்குவதற்கு அரைமணி
நேரம் முன்பு 150 மில்லி வெதுவெது
நீரில் 25 மில்லி பசுநெய் கலந்து
சாப்பிட்டால் சுக பேதியாகும்.
மூலவியாதி கட்டுப்படும்.ஆசனவாய்
அரிப்பு,ஆசன வாயில்
இரத்தம் போவது நிற்கும்.வாய்வுத்
தொல்லை நீங்கும்.

பாதவெடிப்பு, உதடு வெடிப்பு,
உடல் வறட்சி,வாய்ப்புண் உள்ள
இடங்களில் சுத்தமான பசுநெய்யை
தடவி வந்தால் ஓரிரு நாளில் நல்ல
மாற்றம் தெரியும்.உடல் மற்றும் முகத்தில் மெலனின் குறைபாட்டால் ஏற்படும்
வெண்திட்டு வெண்படை நீங்க பசு
நெய்யை பாதிக்கப் பட்ட இடத்தில்
தடவி 30 முதல் 60 நிமிடம் வரை
இளம் வெயிலில் நின்று விட்டு
பிறகு கடலை மாவு/ சோற்றுக்
கற்றாழை/இயற்கை சோப் போட்டு
குளித்து வர 24 நாட்களில் வெண்படை,
வெண் திட்டு,தோல் நிற பேதம் மாறும்.✅

-ஏகப்பிரியன்.

Aum Herbals: 9629131089
Online yoga: 9629131089


#வெண்தேமல்
#ஆண்மையை_அதிகரிக்கும்
#மூலவியாதி

01/06/2026

ஒரு 10 வயது சிறுவன்
20 கிலோ எடை இருந்தாலும்
இல்லாவிட்டாலும் குறைந்தது
ஒரு நாளைக்கு ஒன்று முதல்
ஒன்றரை லிட்டர் நீர்
குடிக்க வேண்டும்.

அதற்கு மேல் ஒவ்வொரு
பத்து கிலோவிற்கும் 400
முதல் 500 ml நீரை சேர்த்துக்
குடிப்பது அவசியம்.
100 கிலோவிற்கு மேலே
எடை அதிகமாக இருந்தாலும் 5
லிட்டருக்கு மேலே குடிக்க வேண்டாம்.

இந்த உடலில் 72 % நீர்தான்
இருக்கிறது.நம் உண்ணும்
உணவில் உள்ள சத்தை உடல்
நீராகத்தான் கிரகித்து
இரத்தத்தில் சேர்க்கிறது.

நீரை தேவையான அளவிற்கு
குடிக்காவிட்டால் உடல் சூடு
தொடங்கி இரத்த சோகை,
அதிக சளி,தூக்கமின்மை,
வாய்வுத்தொல்லை மலச்சிக்கல்
தோல் நோய்கள் என்று உடலில்
பல சிக்கல்கள் ஒவ்வென்றாக
ஆரம்பித்து விடும்.
சரியான உடல் எடையில்
இருக்கும் ஒருவர் சரியான
அளவு அல்லது சற்று கூட
குறைய அவரின் உடல்
உழைப்பிற்கு ஏற்றவாறு நீர்
குடித்து வந்தால் அவரின்
உடல் இயக்கம் ஜீரணமண்டலம்
ஒழுங்காக இயங்கி ஆரோக்கியமாக
முக மலர்ச்சியாக காணப்படுவார்.

உடல் தன் கழிவை நீக்கவும் அதிக
கொழுப்பை கரைக்கவும் உடலுக்கு
சுத்தமான நீர் தினமும் தேவை.

உணவு சாப்பிடும் போது 100
முதல் 200 மில்லி நீர் தேவையானால்
மட்டும் குடிக்கலாம்.அல்லது
சாப்பிட்டு ஒரு மணி நேரம்
கழித்து 200 முதல் 400 ml நீர்
அருந்தலாம்.

வழக்கமாக அரைமணி நேரத்திற்கு
ஒரு முறை 100 முதல் 200 ml தண்ணீர் குடிக்கலாம்.ஒரே நேரத்தில் 400
மில்லிக்கு மேல்நீர் அருந்தக் கூடாது.

நீருக்கு பதிலாக நீர்க் குடிக்கும்
நேரத்தில் இளநீர், சக்கரை சேர்க்காத
பழச்சாறு போன்றவற்றை எடுத்து
வந்தால் அதையும் நீர் கணக்கில்
சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால்,நீர் குடிக்க வேண்டிய
அளவில் 25 % மட்டுமே அப்படி
ஈடு செய்ய வேண்டும்.
மீதி 75 % சுத்தமான நீர் அல்லது
துளசி இலை/சீரகம் போட்டு
காய்ச்சி வடிகட்டிய நீரையே
குடிக்க வேண்டும்.

நீரை குறைவாக குடித்தால்
பல வியாதிகள் வருவது
போலவே தேவைக்கு
அதிகமாகவோ அல்லது
தாகத்தின் பொருட்டோ
ஒரே நேரத்தில் ஒரு லிட்டர்
ஒன்றரை லிட்டர் நீர் குடிப்பதை
வழக்கப்படுத்தி வந்தால் சீக்கிரம்
சிறுநீரகம் செயலிழந்து மரணம்
வரை நேரும் அபாயம் உள்ளது.
நடிகர் புரூஸ்லி பயிற்சிக்கு பின்
அதிக நீர் அருந்தியதாலேயே
இறந்திருக்க வேண்டும் என்று
இப்போது கண்டறிந்துள்ளனர்.!

-ஏகப்பிரியன்.

Aum Herbals: 9629131089
Online yoga: 9629131089


#நீரின்றிஅமையாது


31/05/2026

சக்கரை உள்ளவர்கள் இரண்டு
வேளை சமைத்த உணவு ஒரு
வேளை சமைக்காத சிகப்பு
அவலில் தேங்காய் துருவல்,
ஒரிரு பேரீச்சம் பழம்
சின்ன வெங்காயம்,
கேரட் துருவல் சேர்த்தும்
பிசைந்து சாப்பிடலாம்.

பேரீச்சம் பழம் இனிப்பு தேங்காய்
இனிப்பு என்று அச்சப்பட வேண்டாம்.

சீனி,நாட்டு வெல்லம்,கருப்பட்டி
போன்ற ஒரு பொருளை இன்னொரு
பொருளாக மாற்றி எடுக்கப்படும்
செயற்கை இனிப்புகளையும்
அப்படிப்பட்ட இனிப்புகளில் செய்த
இனிப்பு பண்டங்களையுமே முழுவதும்
தவிர்க்க வேண்டும்.இயற்கை
இனிப்பான பழங்கள்,காய்களை
சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

வேண்டுமானால் செயற்கை
இனிப்புகளான சீனி,வெல்லம்,
கருப்பட்டி,தேன் போன்ற எதையும்
சேர்க்காமல்அவற்றில் செய்யப்பட்ட பண்டங்களானபிரட்,பிஸ்கெட்,சாக்லேட்,
பணியாரம்,லட்டு,ஜிலேபி போன்ற
பண்டங்கள் எதையும் சாப்பிடாமல்
சில நாட்கள் இருந்து எதேனும்
இயற்கை இனிப்பான ஒரு
பழத்தை மட்டும் அளவாக
எடுத்துப் பாருங்கள்.
சக்கரை வேகமாக ஏறவே ஏறாது.

கூடவே உடற்பயிற்சி மூச்சிப்பயிற்சி,
யோகாசனம்,தேவையான ஓய்வு,
நல்ல ஆரோக்கிய மனநிலையுடன்
இருப்பது மிக அவசியம்.

எந்த வேளை உணவாக இருந்தாலும்
பசித்த பின் மட்டுமே உண்ண வேண்டும்.
உண்ணும் போது முதலில் காய்கறி
சாலட்,கூட்டு, பொரியல், வேர்க்கடலை போன்றவற்றை ஒரு கிண்ணம் அளவு
சாப்பிட்டு பிறகு உணவு சாப்பிட்டால்
சக்கரை வேகமானஅளவில் ஏறவே ஏறாது.

தொடர்ந்து இந்த உணவுமுறை
வாழ்க்கை முறையை கையாண்டால்
ஆரம்ப நிலை சக்கரை முற்றிலும்
குணமாகும்.முற்றிய நிலையில்
உள்ளவர்கள் மாத்திரை மருந்துகளோடு
இந்த வழிமுறைகளையும் கடைப்பிடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக நிவாரணம்
பெறலாம்.✅

அதெல்லாம் ஒன்றுமில்லை
உணவை மென்று தின்றால்
போதும் தினமும் உடற்பயிற்சி
செய்தால் போதும் மூலிகை
மருந்துகளை மட்டும் எடுத்து
வந்தால் போதும் என்று
இறுமாப்பாய் இருந்து சக்கரை
முற்றி கட்டுப்படுத்த முடியாமல்,
எடை குறைந்து மிக
பலவீனமானவர்கள் பலரை
கண்டுவருகிறேன்.தயவு
செய்து நீங்களும் அப்படி
இருந்து விடாதீர்கள்.🙏🏼

-ஏகப்பிரியன்.

Aum Herbals: 9629131089
Online yoga: 9629131089



#சக்கரை_வியாதி
#இயற்கைஉணவு

30/05/2026

ஆண்டுக்கு ஒரு முறை Detox
பண்ணிட்டு நாம கத்துக்
கொடுக்குற மூச்சிப்பயிற்சி,
உடற்பயிற்சி, தியான பயிற்சிய
பண்ணிக்கிட்டே இருந்தா,
உங்க வாழ்க்கை முறையை
கொஞ்சம் மாத்திக்கிட்டா,
நிச்சயமா நீங்க இப்ப இருக்குறத
விட மூணு மடங்கு ஆரோக்கியமா
வாழலாம்.உடல் பருமனா
இருந்தா ஆறுமாசத்துல
15 கிலோ வரை எடையை
குறைக்கலாம்‌.🧘🏽‍♂️👨‍👨‍👦‍👦🌴💥✅

கழிவு நீக்கப் பயிற்சி
ஆன்லைன் வகுப்பு.

ஜூன் : 05,06,07.

Whatsapp: 9629131089.





29/05/2026

நேர நிமிர்ந்து படுத்துட்டு ரெண்டு
கால்களையும் மேலே தூக்கி
நீட்டி வெச்சிட்டு காலை/மதியம்/
இரவு உணவிற்கு முன் 15 நிமிடம்
வரை இப்டி படுத்துக்கங்க.உடல்
உறுப்புகள் இரத்தம் ஓட்டம்
பெறும்.ஜீரண நோய்கள் கட்டுப்படும்‌.
பார்வை தெளிவாகும் வெரிகோஸ் வலி
சயாடிகா வலி குறையும்.
ஹெர்னியா பாதிப்பை கட்டுப்படுத்தும்.
தொப்பை குறைய உதவும்.

முதலில் ஒரிரு நிமிடங்கள் இப்படி
கால்களை மேல் நீட்டி பழகி
பிறகு நேரத்தை அதிகப்படுத்தலாம்.
நேராக காலை மேல் தூக்கி படுக்க
முடியாதவர்கள் ஒரு சுவர்
அல்லது டேபிளை பார்த்து படுத்து
காலை சுவற்றிலோ டேபிளிலோ
லேசாக ஊன்றி படுத்திருக்கலாம்.

-ஏகப்பிரியன்

கழிவு நீக்கப்பயிற்சி
ஆன்லைன் வகுப்பிற்கு
Whatsapp: 9629131089



#தொப்பைகுறைய
#வெரிகோஸ்வெயின்
#சயாடிகா

29/05/2026

15 ஆண்டுகளுக்கு முன்பு
சென்னையில் சில குறும்பட
திரையிடல்களிலும் சினிமா
கம்பெனி முகப்புகளிலும்
சத்யேந்திராவை பார்த்துள்ளேன்‌.

எப்போதும்அவரின் தோற்றத்திற்கும்
உடைக்கும் சம்மந்தமே இருக்காது.
ஒரு விவசாயியைப் போன்ற உழைத்து
களைத்த முகம்.உடையைப் பார்த்தால்
90 களின் கதாநாயகர்கள் பாடலுக்கு
அணிவதுபோல் இருக்கும்.வித்யாசமா இருக்கேன்னு அவர் எங்க வந்தாலும்
அவரையே பாத்துட்டிருப்பேன்.
ஒரு நாள் அவரே வந்து அறிமுகப்படுத்திக்
கொண்டார்.அவரிடம் பேசிய போது தான் தெரிந்தது கன்னட இயக்குனர்
கிரீஷ் கர்னாட் படங்கள் தொடங்கி
நம்ம கமல்ஹாசன் எடுத்த சத்யா
படம் வரை பல ஜாம்பவான்களின்
படங்களில் நடித்துள்ளார்,
நிறைய மொழிகளை கற்றவர்,
சினிமாவை அதிகமாக நேசித்து
அதற்காகவே வாழ்கிறவர்.போன்ற
பல தகவல்களை அவரேச் சொன்னார்.
சின்னவர் பெரியவர் என்றில்லாமல்
எல்லோரிடமும் வாய்ப்புக் கேட்பார்.
அவர் போனதும் இவருக்கு என்ன
கேரக்டர் கொடுக்க முடியும்னு சில உதவி இயக்குனர்கள் கொஞ்ச நேரம் பேசி
சிரித்து பிறகு மறந்தும் விடுவார்கள்.
பாமரத் தோற்றத்தில் இருந்த பெரிய
படிப்பாளி தமிழ் சினிமா இவருக்கு
சரியான வாய்ப்புகளை வழங்கி
இருந்தால் நிச்சயம் MS பாஸ்கரைப்
போல மிகச்சிறந்த நடிகராக
ஜொலித்திருப்பார்.சமீபத்தில்;
மணிரத்னத்துக்கு படம் எடுக்கத்
தெரியல, விஜய் படம் ஒரு
குப்பை என்றெல்லாம் பல சினிமா விமர்சனங்களை செய்து இவர்
கவனம் பெற்றதை சமூக ஊடகங்களில்
பார்த்து ரெம்ப சந்தோசப் பட்டேன்.
எப்டியும் இவருக்கு சரியான
வாய்ப்புகளை கொடுக்காத
சினிமாவை, சினிமாக்காரர்களை
இப்படி கிழித்து தொங்கப் போடுவது
அவருக்கு ஏதேனும் ஒரு விதத்தில்
ஆறுதலையும் சில
பெரிய வாய்ப்புகளையும்
கூட வழங்கும் என்று
நினைத்திருந்தேன்.இப்போது
அதுவும் நடக்கவில்லை.
நடிப்புலகில் அறியப்படாதவராய்
இருந்தாலும் சமூக ஊடகத்தில்
அறியப்பட்ட பலராலும்
விமர்சிக்கப்பட்ட ஒரு சிறந்த
கலைஞனாகவே மறைந்துள்ளார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.🧘🏽‍♂️👨‍👨‍👦‍👦🌴💥💐🙏🏼🌷

#ஆழ்ந்த_இரங்கல்
#சத்யேந்திரா


Address

Kanyakumari
1976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aum herbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share