AH Wellness Hub & Asiri Laboratories

AH Wellness Hub & Asiri Laboratories 𝐅𝐀𝐌𝐈𝐋𝐘 𝐏𝐇𝐘𝐒𝐈𝐂𝐈𝐀𝐍 & 𝐀𝐄𝐒𝐓𝐇𝐄𝐓𝐈𝐂𝐈𝐀𝐍   
𝗔𝗦𝗜𝗥𝗜 𝗟𝗔𝗕𝗢𝗥𝗔𝗧𝗢𝗥𝗬 𝐈𝐍𝐕𝐄𝐒𝐓𝐈𝐆𝐀𝐓𝐈𝐎𝐍𝐒 𝐓𝐑𝐄𝐀𝐓𝐌𝐄𝐍𝐓𝐒 & 𝐑𝐄𝐅𝐄𝐑𝐑𝐀𝐋𝐒 𝐇𝐎𝐌𝐄 𝐕𝐈𝐒𝐈𝐓𝐒
𝐂𝐎𝐔𝐍𝐒𝐄𝐋𝐋𝐈𝐍𝐆

⭕️ சிஃபிலிஸ் (Syphilis) - வாயில் அல்லது பாலுறுப்பில் ஏற்பட்டுள்ள புண்.👉▪️எவ்வித நோவும் இல்லாமல் இருந்தால் (தொட்டாலோ அல்ல...
03/07/2026

⭕️ சிஃபிலிஸ் (Syphilis) - வாயில் அல்லது பாலுறுப்பில் ஏற்பட்டுள்ள புண்.

👉▪️எவ்வித நோவும் இல்லாமல் இருந்தால் (தொட்டாலோ அல்லது அழுத்தினாலோ பொதுவாக நோகாது)

👉▪️​2 முதல் 3 கிழமைகளுக்கு மேலாகியும் மாறாமல் இருந்தால்

👉▪️​பாலியல் ரீதியாக புதிய இணையாளி ஒருவருடன் தொடர்பில் இருந்த பின்பு ஏற்பட்டிருந்தால்

❗️​தயக்கமின்றி AH Wellness Hub அணுகி இரத்த பரிசோதனை (Blood Test) மூலம் அதை உறுதி படுத்துவது அவசியம்.

‼️சிஃபிலிஸ் - துடக்க நிலையிலேயே கண்டறிந்தால் இதை மருந்து மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

⚠️ சிஃபிலிஸ் என்பது Treponema Pallidum என்ற பக்ரீரியாவினால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.

⭕️ முதன்மையான பரவும் முறை (Sexual Contact)

☑️​ நேரடி தொடர்பு : சிஃபிலிஸ் உள்ள ஒரு நபரின் உடலில் இருக்கும் புண்கள் (Chancres) அல்லது தடிப்புகளுடன் ஏற்படும் நேரடி தொடுதல் மூலமே இது பரவுகிறது.

◾️​பிறப்புறுப்பு, மலவாசல், அல்லது வாய்வழி உடலுறவு ஆகியவற்றின் போது இந்த கிருமி மிக எளிதாக பரவுகிறது.

☑️ தாய் - சேய் பரவல் : தொற்று உள்ள ஒரு கர்ப்பிணி தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பொக்குள் கொடி வழியாக வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு இந்நோய் பரவக்கூடும் (Congenital Syphilis).

✖️ சாதாரண தொடுதல் மூலம் பரவாது : இந்த நோய் கழிவறைகளை பகிர்வதாலோ, ஒரே தட்டில் உண்பதாலோ, நீச்சல் குளங்கள் மூலமாகவோ அல்லது ஆடைகளை பகிர்வதாலோ பரவாது.

‼️ பெரும்பாலான சிஃபிலிஸ் பாதிப்புகளுக்கு மருந்தே முதன்மையான மற்றும் நிலையான சிகிச்சையாகும்.

⚠️ இலங்கையில் ஆண்டுக்கு 1,000 இந்த நோயின் பாதிப்புகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான முறையான சிகிச்சைகள் உடனடியாக வழங்கபடுகின்றன.

🔴 சிகிச்சை அளிக்கப்படாத சிஃபிலிஸ் நோய் பொதுவாக நான்கு முக்கிய நிலைகளாக உருவாகிறது.

​1️⃣ முதல் நிலை சிஃபிலிஸ் (Primary Syphilis)

🔸️ தொற்று ஏற்பட்ட இடத்தில் (பொதுவாக பிறப்புறுப்பு, வாய் அல்லது மலவாசல் பகுதி) ஒரு உறுதியான, வட்டமான மற்றும் 'நோவற்ற' புண் தோன்றும்.

❗️புண்கள் எந்தவித சிகிச்சையும் அளிக்காத நிலையிலும் பொதுவாக 3 முதல் 6 கிழமைகளில் தழும்புகள் ஏதுமின்றி தானாகவே குணமாகிவிடும்.

​⚠️ முக்கிய குறிப்பு : புண் தானாகவே மறைந்துவிட்டாலும் சிஃபிலிஸ் கிருமி உடலில் இருந்து அழியாது. அது அடுத்த கட்ட நிலைக்கு நகரும். எனவே நோ இல்லாத புண் தோன்றினால் பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

​2️⃣இரண்டாம் நிலை சிஃபிலிஸ் (Secondary Syphilis)

​🔸️முதல் நிலை புண் குணமாகி சில கிழமைகளுக்கு பிறகு இந்நிலை ஏற்படும். அரிப்பு இல்லாத தடிப்புகள், வாய் அல்லது பிறப்புறுப்பு புண்கள், கடுமையான சோர்வு மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் (நெறி கட்டிகள்), ஆங்காங்கே மயிர் கொட்டுதல் ஆகியவை இதன் பிற அறிகுறிகளாகும்.

​3️⃣ மறைந்திருக்கும் நிலை (Latent Syphilis)

🔸️ இந்த நிலையில் நோயின் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் வெளியே தெரியாது. ஆனால் சிஃபிலிஸ் கிருமிகள் உடலுக்குள் மறைந்திருக்கும்.

​4️⃣முற்றிய நிலை / மூன்றாம் நிலை சிஃபிலிஸ் (Tertiary / Late Syphilis)

🔸️பல வருஷங்களாக சிகிச்சை அளிக்கப்படாத சிஃபிலிஸ் நரம்பு மண்டலம் மற்றும் இதயத்தை பாதித்து கடுமையான நிலைகளுக்கு வழிவகுக்கும்.

👉 முற்றிய நிலையில் இது நினைவாற்றல் இழப்பு, பக்கவாதம் (Stroke) மற்றும் மனநல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

⭕️ இலங்கையில் சிஃபிலிஸ் (Syphilis) மற்றும் பிற பாலியல் தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் தேசிய பால்வினை நோய்/ எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாகவும், நோயாளியின் விபரங்கள் மிகவும் இரகசியமாகவும் (Confidential) பாதுகாக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

🇱🇰◾️​தாயிடமிருந்து குழந்தைக்கு சிஃபிலிஸ் தொற்று பரவுவதை இலங்கை முற்றிலும் ஒழித்துள்ளது, ஒரு மிகப்பெரிய மருத்துவ சாதனையாகும்.❗️

🔹️️உங்களுக்கு சிஃபிலிஸ் பாதிப்பு இருப்பதை இரத்த பரிசோதனைகள் (Blood tests) மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

​🔸️உங்களுக்கு தொற்று இருப்பது உறுதியானால் உங்களுடன் சமீபத்தில் பாலியல் தொடர்பில் இருந்த இணையாளருக்கும் அதை தெரிவித்து அவர்களையும் பரிசோதனை மற்றும் தேவைப்பட்டால் சிகிச்சை பெற செய்ய வேண்டும்.

🔹️️​ உங்களது சிகிச்சை முழுமையாக முடிந்து இனி எந்த பாதிப்பும் இல்லை என்று நாம் கூறும் வரை எந்தவிதமான பாலியல் தொடர்புகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

🔸️​ மருந்து சிகிச்சை சரியாக வேலை செய்து உடலில் இருந்து கிருமிகள் முற்றிலும் அழிந்துவிட்டனவா என்பதை உறுதி செய்ய எமது அறிவுரைப்படி தொடர் இரத்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

🔹️​Pregnancy Screening : கர்ப்பிணி பெண்களுக்கு சிஃபிலிஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். இது பிறக்க போகும் குழந்தைக்கு தொற்று பரவாமல் பாதுகாக்கும்.

⭕️ தடுப்பு முறைகள்.

◾️​பாலியலுறவின் போது முறையான பாதுகாப்பு உறைகளை (Condoms) பயன்படுத்துவது தொற்றின் அபாயத்தை மிக கடுமையாக குறைக்கும்.

◾️​பரஸ்பர விசுவாசம் : தொற்று இல்லாத ஒரு துணையுடன் மட்டும் பரஸ்பர பாலியல் உறவை கொண்டிருப்பது மிக சிறந்த தடுப்பு முறையாகும்.

‼️உங்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு சிஃபிலிஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் இருந்தால் தயங்காமல் உடனடியாக எம்மை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

👉 மேலும் இந்த மாதிரியான தகவல்களை தெரிந்து கொள்ள எமது பக்கத்தை
👍 • LIKE 💬 • COMMENT • 🔃 SHARE
❤️ • FOLLOW செய்யுங்கள்.
#சிபிலிஸ்
​ #பாலியல்ஆரோக்கியம்
​ #பால்வினைநோய்

​ ​

👉 'தைமஸ் பள்ளியும்... T செல்களின் வீர பயணமும்!' (நம் உடம்பின் இராணுவ படை)👉 நம் உடலை ஒரு பெரிய இராஜ்ஜியம் என்று கற்பனை செ...
02/07/2026

👉 'தைமஸ் பள்ளியும்... T செல்களின் வீர பயணமும்!' (நம் உடம்பின் இராணுவ படை)

👉 நம் உடலை ஒரு பெரிய இராஜ்ஜியம் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த இராஜ்ஜியத்தில் கோடிக்கணக்கான மக்கள் (உடல் செல்கள்) அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வப்போது வெளிநாட்டிலிருந்து பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற எதிரிகள் படையெடுத்து வருகிறார்கள். இந்த இராஜ்ஜியத்தை காப்பாற்ற ஒரு சிறப்பு இராணுவம் தேவை. அந்த இராணுவத்தின் மிக முக்கியமான வீரர்கள் தான் T செல்கள் (T cells).

👉 இந்த T செல்களின் கதை, நம் உடலின் எலும்பு மஜ்ஜையில் (Bone marrow) துவங்குகிறது. அங்கே தான் இரத்த அணுக்கள் அனைத்தும் பிறக்கின்றன. அதேபோல டி செல்களும் அங்கே பிறக்கின்றன. ஆனால் பிறந்த உடனே அவை போருக்கு தயாராக இருக்காது. புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தையை போலவே இருக்கும்.

👉 அப்போது உடலில் இருக்கும் ஒரு சிறிய சுரப்பி, தைமஸ் சுரப்பி (Thymus gland), இந்த T செல்களை அழைக்கிறது. மார்பெலும்பின் பின்னால் இதயத்தின் மேல் பகுதியில் இருக்கும் இந்த சுரப்பியை, 'இராணுவ பயிற்சி பள்ளி' என்று நினைத்து கொள்ளைங்கள். அங்கே சென்ற T செல்களுக்கு கடுமையான பயிற்சி குடுக்க படுகிறது.

👉 பயிற்சியின் முதல் பாடம் என்ன தெரியுமா? 'நம் உடலையே தாக்கக் கூடாது!' என்பது தான். நல்ல வீரன் யார் என்றால் எதிரியை மட்டுமே தாக்க வேண்டும். தன் நாட்டையே தாக்க கூடாது. இதை T செல்களுக்கு தைமஸ் சொல்லி குடுக்கிறது. தவறாக நம் உடலையே தாக்கும் டி செல்கள் அங்கேயே அழிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் தான் நம் உடல் தன்னையே தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது.

👉 பயிற்சி முடிந்த பிறகு தேர்ச்சி பெற்ற T செல்கள் இரத்தத்திலும், நிணநீர் மண்டலத்திலும் (Lymphatic system) சுற்றி கொண்டிருக்கும். எல்லை பாதுகாப்பு படை போல எப்போது எதிரி வந்தாலும் உடனே செயல்பட தயாராக இருக்கும்.

👉 டி செல்களுக்கும் பல வகைகள் உள்ளன. Helper T cells என்பது இராணுவ தளபதி போன்றது. 'எதிரி வந்துவிட்டான்! எல்லோரும் தாக்குங்கள்!' என்று மற்ற நோய் எதிர்ப்பு செல்களுக்கு உத்தரவு குடுக்கும். Cytotoxic (Killer) T cells என்பது அதிரடிப்படை வீரர்கள். வைரஸ் புகுந்து பாதிக்கப்பட்ட உடல் செல்களை கண்டுபிடித்து நேரடியாக அழித்து விடும். Regulatory T cells என்பது நீதிபதியை போன்றது. 'காணும்...! போர் முடிந்துவிட்டது. இனி நம் உடலை தாக்காதீர்கள்' என்று மற்ற செல்களை அமைதி படுத்தும். Memory T cells என்பது அனுபவம் வாய்ந்த உளவாளி போல. ஒரு முறை வந்த எதிரியை வாழ் நாள் முழுவதும் நினைவில் வைத்து கொள்ளும். அதே கிருமி மீண்டும் வந்தால் மின்னல் வேகத்தில் தாக்கி விரட்டிவிடும்.

✅️ அப்படியானால் தைமஸ் சுரப்பியின் வேலை என்ன?

👉 டி செல்களை உருவாக்குவது அல்ல. அவற்றை முதிர்ச்சியடைய செய்து நல்ல வீரர்களாக மாற்றுவதே அதன் முக்கிய பணி. குழந்தை பருவத்தில் இந்த சுரப்பி மிகவும் பெரியதாகவும் மிகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க இது மெதுவாக சுருங்கி கொழுப்பு டிசுக்களாக மாற துவங்கும். ஏனெனில் தேவையான அளவு பயிற்சி பெற்ற டி செல்கள் ஏற்கனவே உடலில் உருவாகி இருக்கும்.

✅️ ஒரு விஷயம் யோசித்து பாருங்கள்...!
நம் உடலில் இந்த தைமஸ் இல்லை என்றால் என்ன ஆகும்?

👉 பயிற்சி பெறாத டி செல்கள் சரியாக எதிரிகளை தாக்க முடியாது. சில நேரங்களில் நம் உடலையே எதிரி என்று நினைத்து தாக்க துவங்கி விடும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு Autoimmune diseases போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
இதனை சிறியவர் முதல் கொண்டு பெரியவர் வரை அறிந்து கொள்ளவே AH Wellness Hub இந்த பதிவை இடுகிறது.

👉 இன்னொரு சிங்க பெண் படை நம் உடம்பில் இருக்கிறார்கள். அது B cells..! அதை நாளை தெரிந்து கொள்ளலாம்...!

👉 மேலும் இந்த மாதிரியான தகவல்களை தெரிந்து கொள்ள எமது பக்கத்தை
👍 • LIKE 💬 • COMMENT • 🔃 SHARE
❤️ • FOLLOW செய்யுங்கள்.

29/06/2026

👉 எமது AH Wellness Hub இன் ஆடம்பரமான ஏரியோலா (மார்பு காம்பை சுற்றியுள்ள தோல்/ முலை காம்பு வட்டம்) பொலிவூட்டும் சிகிச்சை ✨

👉 கருமை மற்றும் சீரற்ற நிறமிகளின் தோற்றத்தை மென்மையாக குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த மேம்பட்ட துணை மருத்துவ சிகிச்சை இயற்கையான தோற்றத்தை பராமரிக்கும் அதே வேளையில் மென்மையான பொலிவான மற்றும் சமச்சீரான முலை காம்பு தோலின் நிறத்தை மீட்டெடுக்க உதவுகிறது.

👉 இந்த நுட்பம் உங்களது கருவளைய நடுநிலையாக்கல் செயல்முறையை போலவே இருந்தாலும் நிறமி உருவாக்கம் முற்றிலும் வேறுபட்டது.

👉 இந்த சிகிச்சையானது முலை காம்பு வட்டத்தின் நிறமிகளில் காணப்படும் தனித்துவமான உள்ளொளி நிறங்களை சரி செய்ய கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கூடுதலாக 3 தனிப்பயன் வண்ணங்களை கொண்ட ஒரு சிறப்பு கலவையை பயன்படுத்துகிறது.

👉 ஒவ்வொரு சிகிச்சையும் முழுமையாக தனி பயனாக்கப்படுகிறது. மேலும் இது ஒரு படிப்படியான திருத்தம் என்பதால் அழகான நீண்ட கால முடிவுகளை பாதுகாப்பாக பெறுவதற்கு பல அமர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

✔️ தனிப்பயன் வண்ண உருவாக்கம்.

✔️ ஆடம்பரமான, தனிப்பட்ட அனுபவம்.

✔️ படிப்படியான, இயற்கையான தோற்றமுடைய பொலிவூட்டல்.

✔️ ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டம்.

👉 நீங்கள் உங்கள் முலை காம்பு வட்டத்தின் நிறமிகளை பொலிவூட்டவும் சமப்படுத்தவும் அறுவை சிகிச்சையற்ற தீர்வை தேடி கொண்டிருந்ததால் இந்த ஆடம்பர சேவை உங்களை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது.

✨ உங்கள் ஆலோசனையை திட்டமிட அல்லது இந்த பிரத்தியேக சிகிச்சைக்கு நீங்கள் தகுதியானவரா என்பதை அறிய எமக்கு மெசெஞ்சரில் அல்லது வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்யவும்.

👉 மேலும் இந்த மாதிரியான தகவல்களை தெரிந்து கொள்ள எமது பக்கத்தை
👍 • LIKE 💬 • COMMENT • 🔃 SHARE
❤️ • FOLLOW செய்யுங்கள்.
#கருவளையசிகிச்சை

👉 IV குளுடாதியோன் சிகிச்சையானது நிறமி சிகிச்சைகளுக்கு ஆதரவளிக்க உதவும் பல சூழல்கள் உள்ளன.👉 வெவ்வேறு மருத்துவமனைகள் தங்கள...
28/06/2026

👉 IV குளுடாதியோன் சிகிச்சையானது நிறமி சிகிச்சைகளுக்கு ஆதரவளிக்க உதவும் பல சூழல்கள் உள்ளன.

👉 வெவ்வேறு மருத்துவமனைகள் தங்களுக்கு பலனளித்தவற்றின் அடிப்படையில் வெவ்வேறு சிகிச்சை நெறிமுறைகளை கொண்டுள்ளன. அவர்கள் தாங்கள் பணிபுரியும் தன்மையை பொறுத்து வெவ்வேறு சிகிச்சை நெறிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.

👉 எளிமையாக சொல்வதானால் அவர்களிடம் அனைவருக்கும் பொருந்த கூடிய ஒரு நிலையான திட்டம் இல்லை.

👉 ஆனால் AH Wellness Hub தோலில் ஏற்படும் மாற்றங்களை விளங்கி கொள்ள ஒரு தோல் நிறமானியை (skin colorimeter) பயன்படுத்துகிறோம். இது எந்த வகையான நோய்களுக்கு எந்த சிகிச்சை நெறிமுறைகள் பலனளிக்கின்றன என்பதைக் கண்டறிய உதவுகிறது. எமது அனுபவத்தின் அடிப்படையில் கிடைத்த சில படிப்பினைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

➡️ LPP போன்ற நோய்களுக்கு குளுடாதியோனை முன்கூட்டியே எடுத்து கொள்வது நீல நிறமி பழுப்பு நிறமாக மாறுவதை குறைக்க நன்றாக பலனளிப்பதாக தெரிகிறது. (உண்மையில் இது தோல் இயல்பு நிலைக்கு திரும்புவதாகும். ஆனால் மருத்துவ ரீதியாக இது தற்காலிகமாக நிறமி மோசமடைவது போல் தோன்றலாம்).

➡️ மெலாஸ்மா போன்ற நோய்களுக்கு விட்டுவிட்டு ஆனால் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் ஒரு சிகிச்சை நெறிமுறை உதவுவதாக நாம் காண்கிறோம். இதற்கு நேரம் எடுக்கும். மேலும் இந்த தொடர்ச்சி மீண்டும் நோய் வராமல் தடுப்பதற்காகும். மீண்டும் சிகிச்சையின் முடிவுகள் பரவலாக வேறுபடுகின்றன.

➡️ கடுமையான அழற்சிக்கு பிந்தைய நிறமாற்றம் போன்ற நிலைகளுக்கு குளுடாதியோன், லேசர் சிகிச்சையின் முடிவுகளை விரைவுபடுத்துவதாக தெரிகிறது. மேலும் கூடுதல் லேசர் சிகிச்சை அமர்வுகளின் தேவையையும் குறைக்கக்கூடும்.

➡️ நிறமாற்றத்திற்கான தூண்டுதல் காரணி நம்பகத்தன்மையுடன் அகற்றப்படும் போது மட்டுமே நீடித்த முடிவுகள் கிடைக்கும். ஒவ்வொரு சந்திப்பின் போதும் தூண்டுதல் காரணிகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

➡️ தொடர்ந்து நிறம் கருமையடைதல் அல்லது தொடர்ந்து தோல் கருமையாதல் நிலையை அனுபவிக்கும் நபர்களுக்கு விடுமுறைக்கு பிந்தைய திட்டத்தை விட விடுமுறைக்கு முந்தைய சிகிச்சை முறையை கருத்தில் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

➡️ ஒட்டுமொத்தத்தில் தேவைபடக்கூடிய சிகிச்சை அமர்வுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

👉 மேலும் இந்த மாதிரியான தகவல்களை தெரிந்து கொள்ள எமது பக்கத்தை
👍 • LIKE 💬 • COMMENT • 🔃 SHARE
❤️ • FOLLOW செய்யுங்கள்.
#குளுட்டாதியோன்

👉 'அதிர்ச்சிக்கு பிந்தைய மனவுளைச்சல் கோளாறு' (PTSD) என்பது நாம் பொதுவாக நினைப்பது போன்ற தோற்றத்தையோ அல்லது சூழலையோ எப்போ...
27/06/2026

👉 'அதிர்ச்சிக்கு பிந்தைய மனவுளைச்சல் கோளாறு' (PTSD) என்பது நாம் பொதுவாக நினைப்பது போன்ற தோற்றத்தையோ அல்லது சூழலையோ எப்போதும் கொண்டிருப்பதில்லை.

👉 இது முன்னாள் இராணுவ வீரர்களுக்கோ அல்லது பேரிடரிலிருந்து தப்பியவர்களுக்கோ மட்டுமே ஏற்படும் ஒன்றல்ல.

👉 எமது காத்திருப்பு அறையில் அமைதியாக அமர்ந்திருக்கும் உங்களின் ஒருவராகவோ எப்போதும் வேலையின் சிந்தனையிலேயே இருக்கும் உங்கள் சக ஊழியராகவோ அல்லது அது நீங்களாகவோ கூட இருக்கலாம்.

👉 இந்த 'தேசிய PTSD விழிப்புணர்வு நாளில்' அதிர்ச்சி சார்ந்த பாதிப்புகளை (trauma) விளங்கி கொள்ளவும் அதன் அறிகுறிகளை அடையாளம் காணவும் மனநலம் குறித்த வெளிப்படையான உரையாடல்களுக்கான சூழலை உருவாக்கவும் அனைத்து சுகாதார துறை நிபுணர்களையும் AH Wellness Hub இனால் நாம் ஊக்குவிக்கிறோம்.

👉 மேலும் இந்த மாதிரியான தகவல்களை தெரிந்து கொள்ள எமது பக்கத்தை
👍 • LIKE 💬 • COMMENT • 🔃 SHARE
❤️ • FOLLOW செய்யுங்கள்.

✅️ அங்கீகரியுங்கள்.
✅️ ஆதரவளியுங்கள்.
✅️ குணமடைய உதவுங்கள். ❤️

👉 அமைதியான வெற்றி படிகள் ஒவ்வொன்றும் எம்மை மென்மேலும் அதில் வேரூன்ற வைக்கும்…!👉 அநேகமானவர்களது நீண்டகால வெற்றி பயணங்களின...
26/06/2026

👉 அமைதியான வெற்றி படிகள் ஒவ்வொன்றும் எம்மை மென்மேலும் அதில் வேரூன்ற வைக்கும்…!

👉 அநேகமானவர்களது நீண்டகால வெற்றி பயணங்களின் தொடக்கம் கடினமானதாகவும், சோதனைகள், துயரங்கள், கஷ்டங்கள் நிரம்பியதாகவே இருக்கும். எனினும் நாம் அதில் தொடர்ந்து நிலைத்திருந்தால் தன்னிகரற்ற வெற்றியும், புகழும் கிட்டுமென்பது மட்டும் நிச்சயம்.

👉 உங்கள் தொடர்ச்சியான முயற்சியும் உழைப்பும் தன்னம்பிக்கையும் பிரதானமான மூலதனங்களே தவிர வேறொன்றுமில்லை.

👉 அவ்வாறான வெற்றியின் இன்னுமொரு சான்றே இது ஆகும்.

👉 உங்களுக்கு மேலும் அறிவுரைகள் தேவை ஏற்படின் AH Wellness Hub க்கு வந்து எம்முடைய ஆலோசனைகளை பெறலாம். தேவை ஏற்படின் சக வைத்தியர்களுக்கு தமது நிலையை எடுத்து சொல்லி பரிந்துரை (Referral) செய்து கொள்ளலாம்.

👉 மேலும் இந்த மாதிரியான தகவல்களை தெரிந்து கொள்ள எமது பக்கத்தை
👍 • LIKE 💬 • COMMENT • 🔃 SHARE
❤️ • FOLLOW செய்யுங்கள்.

26/06/2026

👉'முக பொழிவு' அல்லது 'facial glow' என்று மெசெஞ்சரில் மெசேஜ் போட்டால் உங்களுக்கான நேரம் ஒதுக்கி தரப்படும்.

👉 மேலும் இந்த மாதிரியான தகவல்களை தெரிந்து கொள்ள எமது பக்கத்தை
👍 • LIKE 💬 • COMMENT • 🔃 SHARE
❤️ • FOLLOW செய்யுங்கள்.

👉 பிள்ளைகளை விளையாட்டுகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டாம். வெறும் சான்றிதழ்களையும் வெற்றி பதக்கங்களையும் வச்சு இங்கே ஒன்றும் ...
25/06/2026

👉 பிள்ளைகளை விளையாட்டுகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டாம். வெறும் சான்றிதழ்களையும் வெற்றி பதக்கங்களையும் வச்சு இங்கே ஒன்றும் செய்ய ஏலாது...!!!

👉 இது அனேகமான ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு திரும்ப திரும்ப சொல்கிற விடயம்.

👉 வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் தான் விளையாட்டுகள் என்று இவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்..! ஆனால் உண்மை அதுவல்ல...!!

👉 விளையாட போனால் படிப்பு குழம்பீடும் என்று ஏன் இவர்கள் யோசிக்கிறார்கள்???

👉 கல்வி மற்றும் விளையாட்டை சமநிலைப்படுத்தி ஓடக்கூடிய தன்மையை பிள்ளைகளுக்கு நாம் கற்று குடுக்காதது, பிள்ளைகளின் கற்றலை சிதைக்கும் வகையில் விளையாட்டு பயிற்சிகளை முன்னெடுக்கும் பயிற்று விப்பாளர்கள்.
இடைவெளியற்று முன்னெடுக்கப்படும் பிரத்தியேக வகுப்புகள், ஒழுக்கத்தை பேணாது வெறும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனப்பாங்குடன் செயற்படும் விளையாட்டு துறை போன்றவை காரணமாக இருக்கலாம்.

👉 ஆனாலும் விளையாட்டு செயல்பாடுகளில் ஈடுபடுவது வெறும் வெற்றி கோப்பைகளுக்கும் சான்றிதழுக்காகவும் மட்டுமல்ல..!!

🇱🇰 இலங்கை சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் (Family Health Bureau) மற்றும் பல்வேறு மருத்துவ பேராசிரியர்களின் சமீபத்திய ஆய்வுகளின் (2024–2025 தரவுகள்) அடிப்படையில்,

✍️ இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களில் 18% வீதமானோர் ஏதேனும் ஒரு வகையான உளவியல் ஆரோக்கிய பிரச்சினையால் (Mental Health Issues) பாதிக்கப்பட்டுள்ளனர்.

✍️ 22% மாணவர்கள் கடந்த 12 மாதங்களில் தங்களை சுற்றிலும் யாரும் இல்லாதது போன்ற தீவிரமான தனிமை உணர்வை (Isolation) எதிர்கொண்டுள்ளனர்.

✍️ 63% மாணவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய பயன்பாடு காரணமாக போதிய நித்திரை இல்லாமையால் (Sleep Deprivation) பாதிக்கப்பட்டுள்ளனர்.

✍️ கேம்பிரிட்ஜ் பிரிஸ்ம் (Cambridge Prisms) ஆய்வின்படி, இலங்கையின் பதின்ம வயதினரில் 60.1% பேர் மிக அதிக அளவிலான உளவியல் அலைக்கழிப்புகளுக்கு (Psychological Distress) உள்ளாகியுள்ளனர்.

✍️ இலங்கையில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் 17.4% வீதமானோர் குளிர்பானங்களை (Carbonated/Sugary Drinks) வழக்கமாக பயன்படுத்துகின்றனர்.

✍️ மாணவர்களில் அதிக சீனி (Sugar) கொண்ட உணவுகளை 41% வீதமானோர் உண்கிறார்கள். அதிக கொழுப்பு (Fat) நிறைந்த உணவுகளை 29% வீதமானோர் உண்கிறார்கள். அதிக உப்பு (Salt) கொண்ட உணவுகளை 28.5% வீதமானோர் உண்கிறார்கள்

✍️மாணவர்களில் அதிக உடல் எடை கொண்டவர்கள் (Overweight) 12% வீதமானோர். உடல் பருமன் நோய் உள்ளவர்கள் (Obese) 3% வீதமானோர்.

👉◾ பெற்றோர்களே இந்த புள்ளிவிவரம் எதிர்காலத்தில் எம் பிள்ளைகளிடையே தொற்றா நோய்களின் (NCDs - NON COMMUNICABLE DISEASES) பெருக்கத்திற்கு வழிவகுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகும்.

✍️ இது இப்படி இருக்க இலங்கையில் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களில் 88.1% வீதமானோர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் கூட சுறுசுறுப்பான உடற்பயிற்சி அல்லது விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

✍️ பரிந்துரைக்கப்பட்ட அளவில் தினசரி உடற்பயிற்சி அல்லது விளையாட்டு செயற்பாடுகளில் முறையாக ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 11.9% மட்டுமே ஆகும்.

✍️ 43.9% வீதமான மாணவர்கள் பாடசாலை நேரம் மற்றும் வீட்டுப்பாடம் செய்யும் நேரங்கள் தவிர்ந்த ஏனைய சாதாரண நேரங்களில் ஒரு நாளைக்கு 3 மணித்தியாலங்களுக்கும் மேலாக இருந்தபடியோ அல்லது படுத்தபடியோ (உடல் உழைப்பற்ற சோம்பல் நிலையில்) கழிக்கின்றனர்.

✍️ இலங்கையில் 13 - 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் சுமார் 12% வீதமானோர் மட்டுமே தினசரி உடற்பயிற்சி அல்லது விளையாட்டு செயற்பாடுகளில் திருப்திகரமான அளவில் ஈடுபடுகிறார்கள்.

✍️எஞ்சிய 88% மாணவர்கள் போதிய உடலுழைப்பின்றியே காணப்படுகிறார்கள் என சுகாதார அமைச்சின் அறிக்கை சுட்டி காட்டுகிறது.

👉 விஷம் போல் பரவி கொண்டிருக்கும் உளவியல் பிரச்சனைகளாலும் உடல் சார்ந்த ஆரோக்கிய பிரச்சனைகளாலும் பாதிக்கப்படுகின்ற பாதிப்படைய போகின்ற நமது பிள்ளைகளை பாதுகாக்க விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செயற்பாடுகளில் குறிப்பிட்ட அளவிலேனும் ஈடுபட அனுமதியுங்கள்.

👉 வெற்றி கோப்பைகளுக்காகவும் சான்றிதழ்களுக்காகவும் அல்ல விளையாட்டுகள்.

👉 அவை உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்திற்கானவை சமநிலை ஆளுமைக்கானவை.

👉 மேலும் இந்த மாதிரியான தகவல்களை தெரிந்து கொள்ள எமது பக்கத்தை
👍 • LIKE 💬 • COMMENT • 🔃 SHARE
❤️ • FOLLOW செய்யுங்கள்.

❗️இது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். இது தனிநபர் சுகாதாரம் இல்லாததால் மட்டுமே ஏற்படுகிறது என்பது தவறான கருத்தாகும்.⭕️ச...
25/06/2026

❗️இது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். இது தனிநபர் சுகாதாரம் இல்லாததால் மட்டுமே ஏற்படுகிறது என்பது தவறான கருத்தாகும்.

⭕️சிரங்கு (Scabies).

​➟ சிரங்கு என்பது தோலில் துளையிட்டு வாழும் மிகச்சிறிய பூச்சிகளால் (mites) ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும்.

​➟ இது முக்கியமாக நெருக்கமான உடல் ரீதியான (சருமத்தோடு சருமம்) தொடர்பின் மூலம் பரவுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய படுக்கை விரிப்புகள் அல்லது ஆடைகளை நீண்ட நேரம் பகிர்ந்து கொள்வதன் மூலமும் பரவ கூடும்.

​ ⭕️பொதுவான அறிகுறிகள்.

​➟ கடுமையான அரிப்பு.

▪️அரிப்பு பொதுவாக மிகவும் அதிகமாக இருக்கும், குறிப்பாக இரவு நேரங்களில் இது மேலும் மோசமடைய கூடும்.

​➟ சிறிய அரிப்புடன் கூடிய தடிப்புகள்.

▪️தோலில் ஏற்படும் தடிப்புகள் சிறிய சிவப்பு நிறக் கொப்புளங்கள், புள்ளிகள் அல்லது புடைப்புகள் போல காணப்படும்.

​➟ சருமத்தில் உள்ள சுரங்க பாதைகள் (Burrows).

▪️பூச்சிகள் தோலுக்கு அடியில் சுரங்கம் தோண்டுவதால், மெல்லிய, வளைந்த, நூல் போன்ற கோடுகள் தோலில் தோன்றக்கூடும்.

​➟ பாதிக்கப்படும் பொதுவான இடங்கள்.

▪️சிரங்கு பொதுவாக விரல் இடுக்குகள், மணிக்கட்டுகள், முழங்கைகள், அக்குள்கள், இடுப்பு பகுதி, பின் பகுதி (buttocks), துடை இடுக்குகள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளை பாதிக்கும்.

​➟ காயங்கள் அல்லது சொறி தழும்புகள்.

▪️அடிக்கடி சொறிவதால் சருமம் சேதமடைந்து, பாக்டீரியா தொற்றுகள் (secondary bacterial infection) ஏற்பட வாய்ப்புள்ளது.

​➟ நெருக்கமானவர்களுக்கு பரவுதல்.

▪️குடும்ப உறுப்பினர்கள், துணைகள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கும் அரிப்பு மற்றும் தடிப்புகள் ஏற்படலாம்.

​⭕️ முகாமை மற்றும் சிகிச்சை.

​➟ சிரங்கு சிகிச்சைக்கான கிரீம்களை பயன்படுத்துதல்.

▪️எம்மால் பரிந்துரைக்கப்படும் பெர்மெத்ரின் (Permethrin) கிரீம் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. அறிவுறுத்தப்பட்டபடி துல்லியமாக இதனை பயன்படுத்த வேண்டும்.

​➟ மருந்தை முறையாக பயன்படுத்துதல்.

▪️பொதுவாக, கழுத்துக்கு கீழே உடல் முழுவதும் மருந்து தடவப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் குறிப்பாக குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு உச்சந்தலை/முகத்திலும் மருந்து தடவ வேண்டியிருக்கலாம்.

​➟ நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கும் சிகிச்சை அளித்தல்.

▪️குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இலேசாக இருந்தாலும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

​➟ ஆடைகள் மற்றும் படுக்கை.

▪️விரிப்புகளை துவைத்தல்.
சமீபத்தில் பயன்படுத்திய ஆடைகள், துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகளை சுடு தண்ணீரில் துவைத்து, நன்றாக உலர்த்த வேண்டும்.

​➟ அரிப்பு சிறிது காலம் நீடிக்கலாம்.

▪️சிகிச்சைக்கு பிறகும் சில கிழமைகளுக்கை அரிப்பு நீடிக்கலாம். ஆனால் அது படிப்படியாக குறைய வேண்டும்.

​➟ முன்னேற்றம் இல்லையெனில் மருத்துவரை அணுகவும்.

▪️அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால், மோசமடைந்தால், புண்ணில் சீழ், வலி, காய்ச்சல் அல்லது பரவக்கூடிய சிவப்பு நிறம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மீண்டும் எம்மை அணுகி பரிசோதிக்க வேண்டும்.

⭕️முக்கிய குறிப்பு

​➟ AH Wellness Hub ஆலோசனையின்றி சிரங்கு மருந்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அதிகப்படியான பயன்பாடு சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.

​➟ மருந்தை சரியாக பயன்படுத்துவதும், நெருங்கிய தொடர்பில் உள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிப்பதும் மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்க முக்கிய வழியாகும்.

👉 மேலும் இந்த மாதிரியான தகவல்களை தெரிந்து கொள்ள எமது பக்கத்தை
👍 • LIKE 💬 • COMMENT • 🔃 SHARE
❤️ • FOLLOW செய்யுங்கள்.
​ #சிரங்கு #சருமநலம் #மருத்துவவிழிப்புணர்வு

1. GLUCOCORTICOIDS.Glucocorticoids என்பது நமது உடலில் இயற்கையாக உருவாகும் ஒரு முக்கிய ஹோர்மோன் குழுவாகும். இதில் மிகவும்...
25/06/2026

1. GLUCOCORTICOIDS.

Glucocorticoids என்பது நமது உடலில் இயற்கையாக உருவாகும் ஒரு முக்கிய ஹோர்மோன் குழுவாகும். இதில் மிகவும் முக்கியமானது Cortisol.

இது சிறுநீரகத்தின் மேல் பகுதியில் இருக்கும் அட்ரீனல் சுரப்பியில் உற்பத்தியாகிறது.

உடலில் மன அழுத்தம், பயம், கவலை, காயம், நோய், அதிக வேலைப்பளு போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால் இந்த ஹோர்மோன் அதிகமாக சுரக்கும். அதனால் இதை 'Stress Hormone' என்றும் அழைக்கிறார்கள். மனிதன் சவாலான சூழ்நிலைகளில் அமைதியாக சிந்திக்கவும் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கவும் இது உதவுகிறது.

ஒருவர் தேர்வு நேரத்தில் அதிக கவலையுடன் இருந்தாலும் திடீரென அதிக கவனத்துடன் படிக்க துடங்குவது, அல்லது ஆபத்து நேரத்தில் உடல் திடீரென வேகமாக செயல்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு பின்னால் இந்த ஹோர்மோன்களின் பங்கு உள்ளது.

காலையில் நம்மை சுறுசுறுப்பாக எழுப்பவும், இரவில் உடலை ஓய்வுக்கு தயாராக்கவும் cortisol ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால் தூக்கமின்மை, அதிக மன அழுத்தம் போன்றவை இந்த ஹோர்மோனின் சமநிலையை பாதிக்கக்கூடும்.

நல்ல விஷயம் என்னவென்றால், தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கும் நபர்களில் Glucocorticoids அதிகரித்து உடல் எடை அதிகரிப்பு, முகம் புடைப்பாக மாறுதல், சர்க்கரை நோய் அபாயம், நினைவாற்றல் குறைவு போன்ற பிரச்சினைகள் வரலாம்.

அதே நேரத்தில் இந்த ஹோர்மோன் மிகவும் குறைந்து விட்டால் உடல் சோர்வு, பலவீனம், மயக்கம் போன்றவை ஏற்படலாம். அதனால் உடலிலும் மனதிலும் சமநிலையை பராமரிப்பதில் Glucocorticoids மிகவும் முக்கியமானவை.

மருத்துவத்தில் Glucocorticoids அடங்கிய மருந்துகள் பல நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஆஸ்துமா, ஒவ்வாமை, மூட்டு வலி, தோல் அழற்சி போன்ற நோய்களில் இவை வேகமாக நிவாரணம் தருகின்றன.

ஆனால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீண்ட நாட்கள் Steroid மாத்திரைகள் எடுத்தால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படலாம். அதனால் Glucocorticoids என்பது நமது உடலுக்கு தேவையான 'அவசர கால பாதுகாப்பு ஹோர்மோன்' என்று கூறலாம்.

2. GROWTH HORMONES.

நம் குழந்தையின் வளர்ச்சி நம் கையில்
Growth Hormone என்பது நம் உடலின் 'வளர்ச்சி இயக்குநர்' போல செயல்படும் ஒரு முக்கிய ஹோர்மோன். இது மூளையில் இருக்கும் Pituitary Gland என்ற சிறிய சுரப்பியில் உருவாகிறது.

குழந்தைகள் மற்றும் இளம் வயதில் உயரம் அதிகரிக்க உதவுவது இதன் முக்கிய பணி என்றாலும், பெரியவர்களிலும் இது தசை வலிமை, எலும்பு உறுதி, உடல் சக்தி மற்றும் கொழுப்பு கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரவில் ஆழ்ந்த நித்திரையின் போது Growth Hormone கூட சுரக்கும் என்பதால் 'நன்றாக தூங்கும் குழந்தைகள் நன்றாக வளரும்' என்று கூறப்படுவது உண்மையுடன் தொடர்புடையது.

ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்,
உடற்பயிற்சி செய்யும் போது Growth Hormone அளவு இயற்கையாக அதிகரிக்கிறது. குறிப்பாக ஓட்டம், நீச்சல், உடற்பயிற்சி போன்ற பயிற்சிகளின் போது இது கூட சுரக்கிறது.

இதனால் உடலில் இருக்கும் கொழுப்பு சக்தியாக பயன்படுத்தப்படுகிறது மற்றும் தசைநார்களை மீள் செயற்பாட்டுக்கு உதவுகிறது. அதனால் தான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் உடல் உறுதியுடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுகிறார்கள்.

Growth hormone உடலில் 'Anti-Aging Hormone' போலவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது தோல் புதுப்பிப்பு, புரத தொகுப்பு மற்றும் நார்களின் பகுப்பாய்வு ஆகியவற்றில் பங்கு வகிக்கிறது.

ஆனால் வயது அதிகரிக்கும் போது இதன் அளவு இயற்கையாக குறைகிறது. அதனால் வயதானவர்களுக்கு தசைகள் சுருங்குதல், சோர்வு மற்றும் கொழுப்பு அதிகரிப்பு போன்ற மாற்றங்கள் காணப்படலாம்.

அதே சமயம் Growth Hormone அதிகமாக இருந்தாலும் பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகளில் மிக அதிகமாக இருந்தால் மிகவும் உயரமாக வளரும் நிலை (Gigantism) ஏற்படலாம்.

பெரியவர்களில் அதிக Growth Hormone இருந்தால் கைகள், கால்கள், முக எலும்புகள் தடிப்பாகும். Acromegaly என்ற நிலை உருவாகலாம்.

குறைவாக இருந்தால் குழந்தைகளில் உயரம் குறையலாம். ஆனால் சரியான சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் பெற முடியும்.

நல்ல தூக்கம், சீரான புரத உணவு, உடற்பயிற்சி, மனவழுத்த குறைப்பு ஆகியவை Growth Hormone இயற்கையாக சுரக்க உதவுகின்றன.

குறிப்பாக இரவு 10 மணி முதல் 2 மணி வரை ஆழ்ந்த தூக்கம் உடலின் 'மீளாய்வு' என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் Growth Hormone அதிகமாக வேலை செய்கிறது. அதனால் அதிக நேரம் இரவில் மொபைல் பயன்படுத்துதல் மற்றும் தூக்கமின்மை வளர்ச்சியையும் உடல் மீட்சியையும் பாதிக்கக்கூடும்.

3. DOPAMINE.

நம் தினசரி வாழ்வில் தொடர்புடையவை.
டோபமின் – மூளையின் 'Reward Hormone'.

டோபமின் (Dopamine) என்பதை பலர் 'மகிழ்ச்சி ஹோர்மோன்' என்று கூறினாலும், உண்மையில் இது உற்சாகம், ஆர்வம், சாதிக்க வேண்டும் என்ற உணர்வு, மற்றும் பரிசு கிடைத்த உணர்வு போன்றவற்றுடன் அதிகமாக தொடர்புடையது.

நமக்கு பிடித்த உணவு சாப்பிடும் போது, யாராவது பாராட்டும் போது, பாடல் கேட்கும் போது, சமூக வலைதளங்களில் 'லைக்' கிடைக்கும் போது அல்லது ஒரு இலக்கை அடைந்த போது மூளையில் டோபமின் அதிகரிக்கிறது. இதனால் 'இதை மீண்டும் செய்ய வேண்டும்' என்ற உணர்வு உருவாகிறது.

இன்றைய காலத்தில் டோபமினுடன் மற்றும் மொபைல் ஃபோன் அடிமைத்தனமும் மிகவும் தொடர்புடையவை. ஒவ்வொரு Notification, Reel, Like, Message ஆகியவையும் மூளைக்கு சிறிய 'Reward Signal' போல செயல்படுகிறது.

அதனால் பலர் காரணமே இல்லாமல் அடிக்கடி ஃபோனை திறந்து பார்க்கிறார்கள். சில விஞ்ஞானிகள் இதை 'மூளையின் mini reward cycle' என்று கூறுகிறார்கள். அதிகமாக மொபைல் பார்த்தல் கவன சிதறலையும் மன சோர்வையும் அதிகரிக்கலாம்.

டோபமின் நமது முயற்சி மற்றும் உந்துசக்திக்கும் முக்கியமானது. டோபமின் சமநிலையாக இருந்தால் ஒருவர் சுறுசுறுப்பாகவும், கவனமாகவும், ஆர்வத்துடனும் இருப்பார்.

ஆனால் டோபமின் குறைவாக இருந்தால் சோம்பல், ஆர்வமின்மை, வேலையை தள்ளி போடுதல் போன்றவை ஏற்படலாம். சிறிய சாதனைகள் கூட — உடற்பயிற்சி செய்வது, அறையை சுத்தம் செய்வது, படிப்பை முடிப்பது போன்றவை — டோபமினை இயற்கையாக அதிகரிக்க உதவும்.

ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், பல நேரங்களில் டோபமின் 'reward கிடைத்த பிறகு' கூட, 'reward கிடைக்க போகிறது' என்ற எதிர்பார்ப்பில் அதிகமாக சுரக்கிறது.

உதாரணமாக பரீட்சை பெறுபேறுக்கு காத்திருப்பது, பிடித்த நபரிடமிருந்து மெசேஜ் வரும் என எதிர்பார்ப்பது, உணவு பார்சல் வந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் வரும் போது அதை எதிர் பார்க்கும் தருணம் போன்றவை மூளையில் ஒரு உந்துதலை உருவாக்குகின்றன.

டோபமினை இயற்கையாக சமநிலைப்படுத்த சில நல்ல பழக்கங்கள்:

தினசரி உடற்பயிற்சி செய்வது.

போதுமான நித்திரை.

முட்டை, மீன், பால், பருப்பு வகைகள், வாழைப்பழம் போன்ற புரதம் நிறைந்த உணவுகள்.

அதிகமான சமூக வலைத்தளங்களை பார்ப்பதை குறைப்பது.

சிறிய இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவது.

உண்மையான வாழ்க்கை சாதனைகள் தரும் மகிழ்ச்சி சமூக வலைத்தளம் தரும் உடனடியான பரபரப்பை விட ஆழமானதாகவும் நீண்டநேரமும் இருக்கும்.

நல்ல உறவுகள், உடற்பயிற்சி, கற்றல், படைப்பாற்றல் மற்றும் வாழ்க்கை இலக்குகள் ஆகியவை மூளைக்கு ஆரோக்கியமான டோபமின் அனுபவத்தை தருகின்றன.

எமது AH Wellness Hub இன் பதிவுகள் தொடரும்.
#ஆரோக்கியம் #ஹோர்மோன்கள்

Address

36, Sellar Veethy
Nallur
00210

Opening Hours

Monday 07:00 - 13:00
16:00 - 20:00
Tuesday 07:00 - 13:00
16:00 - 20:00
Wednesday 07:00 - 13:00
16:00 - 20:00
Thursday 07:00 - 13:00
16:00 - 20:00
Friday 07:00 - 13:00
16:00 - 20:00
Saturday 07:00 - 13:00
16:00 - 20:00
Sunday 07:00 - 13:00
16:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when AH Wellness Hub & Asiri Laboratories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share