14/08/2026
ஆடிக்கும்மாயம்:
பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் சீரகசன்னா பச்சரிசி எல்லாவற்றையும் ஒன்றாக வறுத்து நைசாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும்
1கப் வெல்லத்தை 2கப் தண்ணீரில் கரைத்து நன்றாக கொதிக்க விடவும். ஏலக்காய் பொடி சேர்த்து பொடி சேர்க்கவும்.
அரிசி பருப்பு பொடியை அதில் கொட்டி சேர்த்து கிளறவும். நன்றாக வெந்ததும் தேங்காய் எண்ணெய் சேர்த்து தேவை என்றால் முந்திரி திராட்சை கலவையை வறுத்து சேர்க்கலாம்.
காய்கறி மண்டி:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெந்தயம், கருவேப்பிலை பெருங்காயம் தாளித்து
இரண்டு நாட்கள் முன்பு சாதம் வடித்த கஞ்சியில் அரிசி கழுவிய தண்ணீரையும் சேர்த்து தேவையான காய்கறிகளை உப்பு சேர்த்து அதில் வேக விடவும். புளி தேவையில்லை. தேவையான அளவு சாம்பார் பொடி சேர்த்து ஒன்று சேர்ந்து கொதிக்கும் வரை இளம் தனலில் வேக வைக்கவும். காய்கறி மண்டி தயார்.