10/09/2026
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், திருநெல்வேலியில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை 2026 மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று திருநெல்வேலி அண்ணா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக தொடங்கப்பட்டன. இந்நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்களுடன்,திருநெல்வேலி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் எஸ். கே. கிறிஸ்டோபர் அவர்கள்கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக தொடங்கி வைத்தார். செப்டம்பர் 09 முதல் அக்டோபர் 01 வரை நடைபெறும் இப்போட்டிகளில் பல்வேறு விளையாட்டுகளில் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, மாவட்டம் மற்றும் மண்டல அளவில் சாதனை படைக்க வாழ்த்துகள்!