15/08/2026
மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு
பலாங்கொடையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் அனுசரணையில், மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு 15.08.2026 சனிக்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 1 மணி வரை ஆலய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் “தன்னை அறிதல்” எனும் தலைப்பில் இலக்குககளை சரிவர தீர்மானித்தால், சுஜபாதுகாப்பு உறுதிப்பாடு, கட்டிளமை பருவதை ஆரோக்கியமாக கையாளுதல் போன்ற விடயங்களை பத்மஷாலாவின் இயக்குனரும் தனிமனித மேம்பாட்டு வழிநடத்துனருமான செல்வி நளினாசினி அம்பிகைபாதன் அவர்கள் கலந்துரையாடினார்.
அதேவேளை, “மாணவர்களுக்கான உடல் ஆரோக்கியத்திற்கும் மனவளர்ச்சிக்கும் யோகா” எனும் தொனிப்பொருளில், ஹிமாலயன் யோகினி, வித்யயோக சங்கல்பாவின் ஸ்தாபகரும் இயக்குநரும் சர்வதேச யோகா பயிற்றுவிப்பாளருமான செல்வி வித்யா ஜெயராஜன் அவர்கள் மாணவர்களுக்கான யோகாசன மற்றும் மூச்சுப்பயிற்சிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி, பலாங்கொடை இந்துக் கல்லூரி மற்றும் பலாங்கொடை சீ.சி. தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 9 முதல் 11 வரையான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மாணவர்களின் சுயஅறிவு, உடல் ஆரோக்கியம், மனவளர்ச்சி மற்றும் நேர்மறையான வாழ்க்கை அணுகுமுறையை வளர்க்கும் வகையில் அமைந்த இந்நிகழ்வு, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதும் அர்த்தமுள்ளதுமான அனுபவமாக அமைந்தது.
ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்த அனைவருக்கும் நன்றிகள் 😊🙏